மனக்குதிரை !
... அலுவலக நாற்காலி
அருகே நின்றாள் செருக்காளி!
விழியால் அளந்தேன் அவளழகை
விரலால் இயலாததால்!
குதிரை நடை
குமரி இடை
புதிரை பெரிதாக்கும்
புனலென சடை!
வாழைத் தண்டென
கால்கள்!
வரிக்குதிரைக்கு வாய்த்ததென
தோள்கள்!
சேலாட்டம் விழிகள்
செர்ரியென இதழ்கள்
நூலாட்டம் இடை
நுகர்ந்து மகிழ தடை!
கொடுத்து வைத்தது
அவள் கழுத்தின் நகை
கொள்ளையிட்டது என்மனதை
கோதையவள் புன்னகை!
எங்கேயோ ஒலித்தது ஒருகுரல்...
என்னினிய மனைவியினது குரல்
எழுப்பிவிடு அப்பாவை - எடுத்துவா
இஞ்சிப் பூண்டு டப்பாவை!
அந்நாளில் அலுவலகத்தோழி!
இந்நாளில் இந்தசேவலை
மேய்க்கும் கோழி!
என்னை எழுப்பியது என்மகள்!
எழுந்தேன் பொழுதோ நண்பகல்!
கண்ணை கசக்கினேன் கனவு கலைந்தது
கண்ணெதிரே காதலின்
பரிசாய் நின்றாள்!